கோவையில் பயிற்சி பெறும் ஆப்கானிஸ்தான் வேளாண் அதிகாரிகள்
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர்நோய் தொற்று காப்புத்துறையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்:
இந்தியாவைப்போன்று ஆப்கானிஸ்தானிலும் 80 சதவீத மக்கள் விவசாயத்தில்தான் ஈடுப்பட்டு வருகிறார்கள். அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்வடைய அவர்கள் வேளாண் துறையில் பல நவீன அம்சங்களைப் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதனை உணர்ந்த ஆப்கானிஸ்தான் அரசு, பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர்நோய் தொற்று காப்புத்துறையின் அதிகாரிகள் சிலரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
பயிற்சி:
நேற்று துவங்கி இந்த பயிற்சி தொடர்ந்து 6 மாதங்கள் நீடிக்கும். விதை தர நிர்ணயம், விதை உற்பத்தி, விதை விற்பனை, விதை தூய்மை மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பயிர்சத்து தொழில்நுட்ப வேளாண்மை ஆகியவை சார்ந்த தொழில் நுட்பங்கள் இவர்களுக்கு கற்றுத்தரப்பட இருக்கிறது என வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. முருகேசபூபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications