பிளஸ் டூ தோல்வி: திருச்சி அருகே மாணவி தீக்குளித்து சாவு
திருச்சி: பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த மாணவி விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி கே.கே.நகர் அருகே உள்ளது அய்யப்பன் நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது மகள் காமாட்சி (17).
அவர் இங்குள்ள பெரியார் மணியம்மை பள்ளியில் கடந்தாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிளஸ் டூ படித்து அரசு பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி காமாட்சி கணக்கு பாடத்தில் 51 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் மனமுடைந்த காமாட்சி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் தீப்பிடிக்கவே அவர் வலியால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காபாற்றி சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகி்ச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications