வறுமையிலும் சாதித்த காயல்பட்டினம் முத்துமாரி: ஆசிரயராக ஆசை

Subscribe to Oneindia Tamil

ஆறுமுகநேரி: காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி உளவியல் பாடத்தில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

காயல்பட்டினம் செல்வ வினாயகபுரத்தைச் சேர்ந்தவர் ராகவன். காயல்பட்டினம் நகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளர். இவரது மகள் முத்துமாரி. அவர் காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்தார்.

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்கள் வெளியானதில் அவர் உளவியல் பாடத்தில் 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் மதிப்பெண் விவரம் வருமாறு,

தமிழ்-161, ஆங்கிலம்-109, ஹோம் சயின்ஸ்-164, உளவியல்-184, எழுத்துத்தேர்வு-164, செய்முறை தேர்வு-200 என மொத்தம் 982 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அதனால் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் படித்தேன். இந்த வெற்றிக்கு உளவியல் பாட ஆசிரியர் வளர்மதி, வகுப்பு ஆசிரியர் ஜூவனி, தலைமை ஆசிரியர் திருமலை மற்றும் எனது பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நான் ஆசிரியர் பயி்ற்சி முடித்து ஆசிரியராக விரும்புகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+