8 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்-2 டிஐஜிக்களும் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் இடமாற்றங்கள் தொடருகின்றன. 8 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பிக்களை அரசு நியமித்துள்ளது.அதேபோல நெல்லை, விழுப்புரம் சரக டிஐஜிக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
- மாநில உளவுப்பிரிவு விசேஷ பிரிவு எஸ்.பி. நரேந்திரன் நாயர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாகியுள்ளார்.
- கடலூர் எஸ்.பியாக பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சம்பத்குமார், வேலூர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- கோவை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனர் உமா, கோவை புறநகர் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. கணேசமூர்த்தி, தர்மபுரி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருண், கன்னியாகுமரி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை தலைமையக நிர்வாக பிரிவு உதவி ஐ.ஜி.யாக உள்ள சாமூண்டீஸ்வரி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். தற்போது அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் மதுரை புறநகர் எஸ்.பியாக கார்க் மாற்றப்பட்டுள்ளார்.
இரண்டு புதிய டிஐஜிக்கள்
- இதுவரை காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த எம்.ராமசுப்பிரமணி, நெல்லை சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- அதேபோல மத்திய அரசு பணியில் தற்போது உள்ள வினித்தேவ் வான்கடே, விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications