கொல்கத்தா-ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ தற்கொலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முஸ்தபா பின் காசிம், எம்எல்ஏ ஹாஸ்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜ்யசபா துணைத் தலைவராகவும் இருந்த காசிம் நேற்றிரவு கொல்கத்தாவில் உள்ள தனது எம்எல்ஏ ஹாஸ்டலின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிட்னி பிரச்சனை உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்பட்டு வந்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக, தனது அறையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார் காசிம்.
முதல்வர் மம்தா உள்ளிட்ட திரிணமூல், காங்கிரஸ் தலைவர்களும், மூத்த மார்க்சிஸ்ட் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
காசிமுக்கு மருத்துவ உதவி தேவையென்றால் என்னிடம் கேட்டிருந்தால் அல்லது எனக்குத் தெரிய வந்திருந்தால் நான் நிச்சயம் உதவியிருப்பேன் என்றார் மம்தா.












Click it and Unblock the Notifications