சென்னை, பெங்களூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்-உஷார் நிலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சென்னை- பெங்களூர் இடையிலான விமானங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டல் வந்ததைத் தொடர்நது இரு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலையில் பெங்களூர்-சென்னை இடையிலான இரண்டு விமானங்கள் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து அந்த விமானங்கள் முழுமையாக சோதனையிடப்பட்டன. மேலும் இரு நகரங்களின் விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டது.
அனைத்து விமானங்களையும் பரிசோதிப்பதற்காக வெடிகுண்டு சோதனைப் பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு விமான நிலையங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications