ஜெயலலிதாவைப் பாராட்டி சென்னையில் ஜூன் 18ல் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டம்

சென்னையில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், கட்சி அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சீமான், மணிவண்ணன், சத்யராஜ் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது சீமான் பேசுகையில்,
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வாகும். இந்த தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கச்சத் தீவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களிலும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications