For Daily Alerts
Just In
ஜூலை 7-ம் தேதி: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்!
இதுபற்றி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க செயலாளர் விஷ்வாஸ் உதாகி கூறுகையில், "வங்கித் துறையில் அன்னிய முதலீட்டை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கிகள் கட்டுப்பாடு சட்டத்தை திருத்தி, அன்னிய வங்கிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் 10 சதவீத ஓட்டு உரிமையை அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வற்புறுத்துகிறோம்.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான நோட்டீசை, இந்திய வங்கிகளின் சங்கத்துக்கும், தொழிலாளர் கமிஷனருக்கும் ஏற்கனவே அனுப்பி விட்டோம்.
வங்கி ஊழியர்களின் ஐக்கிய சங்கமும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறது. இந்த வேலை நிறுவத்தத்தில், இந்தியாவில் உள்ள தனியார் வங்கி ஊழியர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்," என்றார்.
Comments
English summary
Bank employees across the country will strike work on July 7 to protest against the government decision to dilute its equity in the banks and giving foreign investors additional voting rights.
Story first published: Wednesday, June 6, 2012, 16:58 [IST]