திருப்பூர் ஆலையில் பெண் தற்கொலை: கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு நோட்டீஸ்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் திமுகவுடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் தாராபுரத்தில் நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். நிறுவனத்துக்குள்ளேயே அவர்கள் தங்குவதற்கு விடுதி உள்ளது.
அனுப்பர்பாளைய ஆலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்த சவரியம்மாள் (25) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கடும் தோல் வியாதி காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த ஆலையில் உரிய முறையில் தொழிலாளர்களின் நலன் பேணப்படாததே தற்கொலைக்குக் காரணம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியனுக்கு தொழிற்சங்கத்தினர் புகார் அனுப்பினர். புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை இணை தலைமை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், பெஸ்ட் ராமசாமியின் ஆலைகளில் சோதனை நடத்தினார். தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினார்.
விசாரணையைத் தொடர்ந்து தொழிலாளர்களின் நலனைப் பேணும் வகையில் இந்த ஆலையில் வசதிகள் ஏதும் செய்து தரப்படவிலலை என்றும், அதிக நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகவும் கூறி பெஸ்ட் ராமசாமி, யூனிட் மேலாளர் சார்லஸ் செல்லதுரை ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தொழிலாளர் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து பெஸ்ட் ராமசாமி கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக என்னை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நினைக்கிறேன். எனது நிறுவனத்தில் 3,000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அனைத்து அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications