சொத்து வரி வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தது உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சொத்து வரித்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

முன்பு முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது 1993-94ம் ஆண்டில் சொத்து வரியை அவர் கணக்கில் காட்டவில்லை என்று கூறி 1996ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், சொத்து வரி உதவி ஆணையர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா மனு தாகக்கல் செய்தார். அதை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். அதில்,

1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்பிய உதவி ஆணையர், பல்வேறு விவரங்களில் மனதை செலுத்தவில்லை. என்மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி வழங்கியதில் உள்நோக்கம் உள்ளது.

எனவே என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவை ஏற்று, சொத்து வரி வழக்கிலிருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+