தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராக சாந்தி ஷீலா நாயர் நியமனம்- அரசு

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராக சாந்த ஷீலா நாயர் நியமிக்கப்படுகிறார்.
இது போக திட்டக் கமிஷனுக்கான ஐந்து புதிய உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1. சென்னை புற்றுநோய் மைய தலைவர் வி.சாந்தா
2. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஸ்ரீதர் (சுகாதாரம்)
3. கோவை கற்பகம் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி (விவசாயம்- பாசனம்)
4. தொழில் அதிபர் ஏ.சி. முத்தையா (தொழில்துறை)
5. முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி (கல்வி) ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் மற்றும் நீர்ப்பாசனத்திற்கான உறுப்பினராக ராமசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்த ஷீலா நாயர் கடந்த திமுக ஆட்சியின்போது மத்திய அரசுப் பணியில், மத்திய சுரங்கத்துறை செயலாளராக இருந்து வந்தார். தற்போது அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications