மும்பையைத் தொடர்ந்து குஜராத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

மும்பையில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 19 பேர் பலியாகினர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும் இன்னும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மஹாராஷ்டிரா போலீசின் தீவிரவாத தடுப்புப் பிரிவு குண்டுவெடிப்புகள் நடந்ததற்கு முன்தினம் தான் முஜிப்ஷேக், அபு பைசல் என்னும் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை கைது செய்தது. தற்போது அவர்கள் இருவரிடமும் மும்பை தாக்குதல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இருவரும் கடந்த 2008-ம் அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டிவெடிப்புகளில் தொடர்புடையவர்கள். தற்போதைய மும்பை தாக்குதல்களை நடத்திய தீவிரவாதகிள் யார் என்று அவர்களுக்கு தெரியுமா என்று விசாரிக்கப்படுகிறது. விசாரணையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளைக் கொல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே மும்பையை அடுத்து குஜராத்தின் முக்கிய நகரங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அகமதாபாத், சூரத் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications