ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு- ஆய்வு நடத்த கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்டம் கைலாசநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்கவிருப்பதால் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக கோவிலின் உள்பிரகாரத்தில் உள்ள பழைய கல் தளத்தை புதிய கல் தளமாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
கோவிலின் உள் பிரகாரத்தில் உள்ள சுனை சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டை இடித்துவிட்டு புதிய படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது. அதற்காக பழைய படிகட்டுகளை இடித்தபோது அதற்கு பின்னர் வெற்றிடம் இருப்பதைப் பார்த்தனர். உடனே இது குறித்து அறநிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் வீரராஜன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் அந்த பகுதியைத் தோண்டியபோது சிறிய அறை ஒன்று இருந்தது தெரிய வந்தது. ஒரு வேளை அது பாதாள அறையாகவோ, சுரங்கப் பாதையாகவோ இருக்கலாம் என்று நினைத்து மேலும் தோண்டினர். ஆனால் 3 அடி வரைத் தோண்டியதும் அங்கிருந்து வேறு எங்கும் அந்த அறை செல்லவில்லை.
தோண்டப்பட்ட இடத்தின் அருகில் படிக்கட்டை அடுத்து இருக்கும் கல்தூணில் படம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறை அக்காலத்தில் முக்கியமான அறையாக இருக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.
இது தவிர கோவிலின் உள்புறத்தில் உள்ள கல் சுவர்கள் மற்றும் தூண்களில் அக்கால எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே தொல்லியல் துறை கோவிலில் ஆய்வு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக கைலாசநாத சுவாமி கோவிலுக்கு அருகில் அரசு குழந்தைகள் காப்பகம் கட்டுவதற்காக பூமியைத் தோண்டியபோது யானையின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications