பொறுப்பேற்ற அன்றே டிரான்ஸ்பர் ஆன நெல்லை டிஐஜி ராமசுப்பிரமணி
நெல்லை: பொறுப்பேற்ற ஒரே நாளில் நெல்லை சரக டிஐஜி ராமசுப்பிரமணி திருச்சி ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார்.
நெல்லை டிஐஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் கடந்த மாதம் தென் சென்னை இணை கமிஷனராக மாற்றப்பட்டார். காஞ்சிபுரம் டிஐஜி ராமசுப்பிரமணியன் நெல்லை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைதரபாத் மற்றும் லண்டனில் அவர் பணியிடை பயிற்சியில் இருந்ததால் அவர் பொறுப்பேற்கவில்லை.
ஒரு மாத பயிற்சி முடித்து அவர் நேற்று முன்தினம் மதியம் நெல்லை சரக டிஐஜியாக ராமசுப்பிரமணி பொறுப்பேற்றார். அப்போது அவர் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ராமசுப்பிரமணி திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக திடீரென மாற்றம் செய்யப்பட்டார். டிஐஜியாக பொறுப்பேற்ற ஒரே நாளில் ராமசுப்பிரமணியை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications