தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினுக்குப் பதில், புதிய கமிஷனராக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் பி.ஏவான எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்திரவில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக ஆஷிஸ் குமாரும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக எஸ். மதுமதியும், திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக டாக்டர் ஆர். செல்வராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் வளர்ச்சி, அறநிலையத்துறை, செய்தித் துறை துணைச் செயலாளராக எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநராக சத்ய பிரியா ஷாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளராக கே. விஜயகுமார் பதவியேற்பார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக சி.வி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநராக ஏ. முகமது அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கால் நடை மருத்துவத்துறை இயக்குநனராக டாக்டர் ஆர். பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிறுவனத்தின் இயக்குநராக பி. அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி ஆணையராக எஸ். நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1991ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்பெஷல் பி.ஏவாகவும், 1992ல் முதல்வரின் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதே போல திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக அஜய்யாதவும், திருச்சி மாநகராட்சி ஆணையராக வீரராகவராவும், சேலம் மாநகராட்சி ஆணையராக ஜி. லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications