உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி! - ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.
இதுபற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்.
முதுநிலைப் பட்டதாரிகளுக்கு நேரடி வாய்ப்பு
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியமர்த்துவது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அரசு கைவிட்டு பழைய முறையிலேயே பணியமர்த்த வேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 20-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
2-வது முறையாக வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. அன்று திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.
பா.ம.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசு தொடர்ந்துள்ளது. இது மாதிரியான பழிவாங்கும் போக்கை கைவிட்டு மக்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் தீர்க்க வேண்டும். தமிழகத்தில் இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மதுகடைகள் மூலம் அதிக வருமானம் ஈட்ட அரசு முயற்சித்து வருகிறது.
மது அருந்த வயது வரம்பு
நியாய விலைக்கடைகள் புதிதாக திறக்கப்படாமல் பல மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படுகின்றன. கேரளாவில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்கப்படுவதில்லை. அதேபோல் மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை. 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த மாநிலங்கள் காட்டும் வழியில் தமிழக அரசும் செயல்பட்டு முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவி, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற பதவிகள் கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications