இத்தாலி கடலில் படகில் பிணமாகக் கிடந்த 25 அகதிகள்: விசாரணைக்கு உத்தரவு

லிபியா உள்ளிட்ட வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கலவரம் நடந்து வருவதால் அங்குள்ள மக்கள் அன்டை நாடுகளுக்கு தப்பித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று லாம்பெடுசா தீவில் 15 மீட்டர் நீளமுள்ள ஒரு படகு வந்தது. அந்த சிறிய படகில் 36 பெண்கள், 21 குழந்தைகள் உள்பட 271 ஆப்பிரிக்க அகதிகள் இருந்தனர். படகின் என்ஜின் அறையில் 25 பேர் இறந்து கிடந்ததை இத்தாலி்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். அந்த உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. அவற்றை லாம்பெடுசா தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இது குறித்து படகில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது,
லிபியாவில் கலவரம் நடப்பதால் அங்கிருந்து இந்த படகில் தப்பித்து வந்தோம். நாங்கள் கடந்த 3 நாட்களாக கடலில் பயணித்தோம். சிறிய படகில் நாங்கள் அனைவரும் பயணித்தோம். அதில் பலர் என்ஜின் அறையில் இருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அதை விட்டு வெளியே வர முடியவில்லை. எனவே, அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்றனர்.
25 பேர் இறந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரேதங்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்றார்.
படகில் வந்திறங்கிய அகதிகள் 25 பேர் இறந்திருப்பது பற்றி வாய்த் திறக்கவில்லை. கடற்படையினர் படகை சோதனையிட்டபோது தான் என்ஜின் அறையில் 25 சடலங்கள் கிடப்பதைப் பார்த்தனர்.
கடந்த சில வாரங்களாக லிபியாவில் இருந்து அதிக அளவில் அகதிகள் லாம்பெடுசா வருகின்றனர். பெரும்பாலும் சிறிய மீன்பிடி படகுகளில் தப்பி வருகின்றனர். அதில் சில படகுகள் விபத்துக்குள்ளாகுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications