ராமேஸ்வரத்தில் இலங்கையைக் கண்டித்து பாஜக கடல் முற்றுகைப் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இன்று இலங்கை கடற்படையைக் கண்டித்து பாஜகவினர் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்கி வருவதைக் கண்டித்தும், அந்தத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் தமிழக பாஜக சார்பில் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகைப் போராட்டத்திற்காக தொ்ண்டர்கள் பெருமளவில் குவிந்தனர்.போராட்டத்தில் தேசிய நிர்வாகி முரளிதர ராவ், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படகுகளில் ஏறி கடலுக்குள் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+