ரூ. 20 கோடி கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு அபகரித்தார் அழகிரி: சிஎன்என்-ஐபிஎன்
டெல்லி: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது மனைவி காந்தி அழகிரி மூலம், ரூ. 20 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை, 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினிடமிருந்து ரூ. 85 லட்சத்துக்கு முறைகேடாக வாங்கியுள்ளார் என்று சிஎன்என்-ஐபிஎன் டிவி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி:

50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கியுள்ளார் அழகிரி. 2010ம் ஆண்டு இந்த நில விற்பனை நடந்துள்ளது.
மு.க.அழகிரி மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிலத்தை பெற்றுள்ளனர். முறைகேடாக நடந்த இந்த நில விற்பனை தொடர்பாக அழகிரியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அழகிரி தவிர திமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள், 3 மூத்த திமுக தலைவர்களும் தமிழகம் முழுவதும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் வீரபாண்டி ஆறுமுகம் முக்கியமானவர். இவர் தவிர கே.என்.நேரு மற்றும் பரிதி இளம்வழுதி ஆகியோரும் நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், மு.க.ஸ்டாலினின் வலது கரமுமான ஜே.அன்பழகனும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் 24 குடும்பத்தினருக்குச் சொந்தமான அங்கம்மாள் காலனியில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் நிலத்தை இழந்தவர்களில் ஒருவரான உமா என்பவர் கூறுகையில், எங்களது சொந்த வீட்டை விட்டு அவர்கள் எங்களை விரட்டியடித்தனர். எங்களை தெருவில் அலைய விட்டனர். கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று குமுறினர்.
குணசீலன் என்பவர் கூறுகையில், அமைச்சருக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் பிறகு ஏன் கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ, கமிஷனர் ஆகியோர் நாங்கள் புகார் கொடுத்தபோது உதவ முன்வரவில்லை. எல்லோருமே என் கண்மூடிப் போயிருந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications