தமிழக மீனவர்களை தாக்கி-மீன்களை கடலில் வீசிய இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
தமிழக பகுதிகளில் இருந்து நேற்று மீன் பிடிக்க 50க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவரிடம் இருந்த பிடித்து வைத்த மீன்களை எடுத்து, மீண்டும் கடலுக்குள் ஏறிந்துவிட்டனர்.
மேலும் மீனவர்களிடம் இருந்து வலைகளை அறுத்து கடலில் போட்டுவிட்டனர். ஆனால், மீனவர்கள் யாரையும், கடற்படையினர் தாக்கவில்லை. இதனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் சில தமிழ் மீனவர்களை தாக்கும் வகையில், மன்னார் பகுதியை சேர்ந்த சில இலங்கை மீனவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications