பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு 3 நாட்களில் ரூ. 2.5 லட்சம் கோடி நஷ்டம்
Subscribe to Oneindia Tamil

பங்குச் சந்தை சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங்களுக்கு நேற்று மட்டும் ரூ. 1,22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களில் ஏற்பட்ட மொத்த சரிவு ரூ. 2,55,000 கோடி ஆகும். இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ. 26,69,703 கோடியாகும். மும்பை பங்குச் சந்தையி்ல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ. 58,17,227 கோடியாகும்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டிஎல்எப், ஜெயப்பிரகாஷ் என்டர்பிரைசஸ், கோல் இந்தியா, எஸ்பிஐ, டாடா பவர், ஹின்டால்கோ, மாருதி, ஐடிசி, விப்ரோ, ஸ்டெர்லைட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஆர்காம், ரியைலன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்பிரா ஆகியவை மிகப் பெரிய அளவில் நஷ்டத்தை சம்பாதித்த நிறுவனங்களில் சில.












Click it and Unblock the Notifications