ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு கோர காங்கிரஸ், திமுக அல்ல-சிங்வி
டெல்லி: ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்டுமாறு கோர காங்கிரஸ் ஒன்றும் திமுக அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு கருணை காட்டுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி 2 முறை கோரிக்கை விடுத்து அறிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒரு வேளை ராஜீவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற நிலையில் மன்னிப்போம், மறப்போம் என்ற அடிப்படையில் கருணை காட்டியிருப்பார் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், இது (மூவரைத் தூக்கிலிடுவது) முற்றிலும், அரசியல் சாசன, சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடைமுறை. இதில் காங்கிரஸுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை. எனவே இதுகுறித்து நாங்கள் நிச்சயம் கருத்து தெரிவிக்க மாட்டோம் என்றார்.
கருணாநிதியின் கோரிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், காங்கிரஸ் ஒன்றும் திமுக அல்ல என்றார்.
மரண தண்டனையை காங்கிரஸ் ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக, இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications