பள்ளி ஆசிரியர் செக்ஸ் சில்மிஷம்: 5-ம் வகுப்பு மாணவி தீக்குளிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
திருக்கோயிலூர்: பள்ளி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், மனமுடைந்த மாணவி, தீக்குளிக்க முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வெல்லம்புதூர் அரசு பள்ளி உள்ளது. இதில் 5 வகுப்பு ஆசிரியர் ஒருவர், மாணவியை சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு வந்து யாரிடம் பேசாமல் இருந்துள்ளார்.
பின்னர் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில், தீக்குளித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்றார். அவரை மீட்ட வீட்டினர், அப்பகுதி பொதுமக்களுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications