மனைவி புகார்: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த போலீஸ் ஏட்டு கைது

Subscribe to Oneindia Tamil

வடக்கன்குளம்: நெல்லை அருகே அடுத்தவர் மனைவியுடன் குடும்பம் நடத்திய காவலர் கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்

பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை பயன்படுத்தி வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் பணம் வாங்கிய யாருக்கும் இசக்கியம்மாள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பணகுடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இசக்கியம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இசக்கியம்மாள் பணகுடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்து போட வரும் போது அங்கு பணியாற்றிய ஏட்டு கண்ணனுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து ஏட்டு கண்ணனும், இசக்கியம்மாளும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இது குறித்து கண்ணனின் மனைவி கற்பகம் நெல்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் கண்ணன் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் இசக்கியம்மாளுடனான கள்ளத்தொடர்பை கண்ணன் விடவில்லை.

இந்நிலையில் இசக்கியம்மாள் வீட்டில் கண்ணன் இருந்த போது கற்பகம் தமது மகள்களுடன் சென்று கணவனை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் கற்பகத்தை கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து கற்பகம் தனது மகள்கள் ரேணுகாதேவி, அனுசுயா ஆகியோருடன் சென்று பணகுடி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து சம்பவத்தன்று வடக்கன்குளத்தில் இசக்கியம்மாள் வீட்டில் தங்கியிருந்த ஏட்டு கண்ணனை கையும் களவுமாக பிடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+