டெல்லி வெடிகுண்டுச் சம்பவத்தில் என் மகனுக்குத் தொடர்பி்ல்லை-காஷ்மீர் இளைஞரின் தந்தை
ஸ்ரீநகர்: டெல்லி உயர்நீதிமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹூஜி தீவிரவாத அமைப்பின் பெயரில் இமெயில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் எனது மகனுக்குத் தொடர்பில்லை என்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் கைது செய்யப்பட்ட இளைஞர் சோயப் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோயப் பிஏ படித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகனுக்கு இதுபோன்ற செயல்களில் நிச்சயம் தொடர்பு இருக்காது என்று சோயப்பின் தந்தை முஷ்டாக் அகமது ஷேக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் அப்பாவி. அவனுக்கு இதுபோன்ற செயல்களில் தொடர்பு இருக்காது. அவன் அப்படிப்பட்டவன் இல்லை. அதுபோல செய்ய மாட்டான் என்றார்.
உடன் இருந்த சோயப்பின் தாயார் கூறுகையில், எனது மகன் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தட்டும். அவன் மீது தவறு இருப்பதாக இருந்தால் தூக்கில் போடுங்கள் என்றார்.
கிஷ்த்வாரில் உள்ள ஒரு இன்டர்நெட் மையத்திலிருந்துதான் ஹூஜி பெயரில் இமெயில் வந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுப் படையினர், ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி சோயப் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications