தயா பொறியியல் கல்லூரி விவகாரம்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனு தள்ளுபடி
மதுரை: தயா பொறியியல் கல்லூரி கட்ட விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனுப்பிய நோட்டீசை திரும்பப் பெற உள்ளதை அடுத்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை அருகே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குடும்பத்திற்கு சொந்தமாக தயா பொறியியல் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி பாசனக்குளம் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து மதகுகளை சேதப்படுத்தியதாக விவசாயி ராமலிங்கம் என்பவர் மதுரை கலெக்டரிடம் புகார் கொடுத்தார்.
இந்த புகார் குறித்து மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மதுரை கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பினார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இந்த நில ஆக்கிரமிப்பு புகார் கூறப்பட்டுள்ளது என்று அழகிரி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி அழகிரி தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரசு தரப்பில் கலெக்டர் நோட்டீசை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு புகார் குறித்து விளக்கம் கேட்டு சட்டத்துக்குட்பட்டு புதிதாக நோட்டீஸ் அனுப்ப கலெக்டருக்கு உரிமை உண்டு. நில ஆக்கிரமிப்பு புகார் குறித்து புதிதாக நோட்டீஸ் அனுப்ப கலெக்டருக்கு உரிமை உள்ளது. இந்த நோட்டீசை மனுதாரர் சட்டப்படி எதிர்கொள்ளலாம் எனறு கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications