கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கொத்தனார் கொலை- மனைவி, கள்ளக்காதலன் கைது
தூத்துக்குடி: தனது கள்ளக்காதல் உறவை கண்டித்த கொத்தனாரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி கள்ளக்காதலருடன் போலீசாரிடம் சிக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் (40). இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (34). இவர் ராமரின் உறவினர். இருவரும் கட்டடத் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு, பெரியசாமியின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து முத்தையாபுரத்தில் தனியாக வசித்து வந்த பெரியசாமியை, தனது வீ்ட்டில் வந்து தங்கி கொள்ளுமாறு ராமர் அழைத்தார்.
இந்த நிலையில் பெரியசாமிக்கும், ராமரின் மனைவி சுந்தரிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டு விட்டது. அதிக குடிப்பழக்கம் கொண்ட ராமர் தினமும் போதையில் வீட்டிற்கு வந்தது கள்ளக்காதல் ஜோடிக்கு மேலும் செளகரியமானது.
இந்நிலையில் குடிப்பழக்கத்தால் ராமரின் உடல் பாதிக்கப்பட்டது. இதனால் குடிப்பழக்கத்தை ராமர் குறைத்தார். இதனால் சுந்தரியும், பெரியசாமியும் தங்களது கள்ளக்காதலைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த சமயத்தில், இருவரும் நெருக்கமாக ஒருமுறை இருந்தபோது அதை ராமர் பார்த்து விட்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் கண்டித்தார். இதனால் இருவரும் ஆத்திரமடைந்தனர். தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக நிற்கும் ராமரை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதன்படி பெரியசாமி ராமருக்கு மது வாங்கி குடிக்க வைத்தார். இதில் போதையில் தள்ளாடிய ராமரை குரும்பூர் காட்டு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு ராமரின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டார். இதில் தலையில் படுகாயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பிணத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், முன்னுக்குப் பின்னாக பதிலளித்த இருவரும் கடைசியில் ராமரை திட்டமிட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
கள்ளக்காதலுக்காக உறவினரை கொலை செய்த பெரியசாமி மற்றும் கணவரை கொலை செய்ய உடந்தையாக இருந்த சுந்தரி ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications