பிளஸ் 2 தனித்தேர்வில் காப்பி: பிட் அடித்து சிக்கிய சிக்கிய 2 தலைமை ஆசிரியர்கள்

Subscribe to Oneindia Tamil

விருத்தாசலம்: பிளஸ் 2 தனித்தேர்வில் காப்பியடித்த 2 தலைமை ஆசிரியர்கள் உட்பட 7 பேரை பறக்கும் படை கையும், களவுமாகப் பிடித்தது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 தனித்தேர்வுகள் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலத்தில் உள்ள புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் 136 பேர் தனித்தேர்வு எழுதினர். இங்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தேர்வு எழுதினர்.

அனைவரும் ஆர்வமாக தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில் தேர்வு மையத்திற்கு திடீர் என்று பறக்கும்படையினர் வந்தனர். அப்போது காப்பியடித்துக் கொண்டிருந்த 5 மாணவர்கள் சிக்கினர்.

இதே போன்று காப்பியடித்த வேப்பூர் கிழக்கு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், வடபாதி நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் ஆகியோரும் பிடிபட்டனர். இதையடுத்து பறக்கும்படையினர் அந்த இருவரையும் தட்டிக்கேட்டனர். அதற்கு அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்ற ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு பறக்கும்படையினருடன் தகராறு செய்து மிரட்டினர்.

இது குறித்த தகவல் விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் பத்ரூவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தப் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சமாதானம் செய்தார். பின்னர் தேர்வு தொடர்ந்து நடந்தது.

இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+