கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீ்ன் மறுப்பு: போலீஸ் காவலுக்கும் அனுமதி மறுப்பு
நெல்லை: நில அபகரிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீன் மறு்ககப்பட்டுள்ளது. மேலும் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருமாள்புரம் நில மோசடி வழக்கில் கருப்பசாமி பாண்டியனை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரி நெல்லை ஜெஎம் 1-வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மாஜிஸ்ட்ரேட் ராபின்சன் முன்பு விசாரணைக்கு வந்தது. கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க திமுக வழக்கறிஞர்கள் ஆவுடையப்பன், கார்த்தீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருப்பசாமி பாண்டியன் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அவர் மிரட்டினார் என்று கூறுகிறார்களே, அதற்கான ஆதாரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால் அவரை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என்றனர்.
கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் எடுக்கும் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். மேலும் இந்த வழக்கில் கருப்பசாமி பாண்டியனுக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் அளித்த மனுவும் விசாரணைக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்போவதாக திமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications