போதிய பாதுகாப்பு செய்த பின்னரே 'பி' அறையைத் திறக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டியினர் கோவிலுக்குள் சென்று ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு நடத்தினர். அப்போது பெருமளவில் வைர, வைடூரிய, தங்க, வெள்ளி நகைக் குவியல் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும் முக்கியமான பி அறையை மட்டும் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த அறையைத் திறந்து பார்த்தால், குடும்பமே நாசமாகி விடும் என தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ குடும்பமும் பி அறையைத் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ஏற்கனவே பலமுறை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா அறையைத் திறந்துள்ளதாகவும், அங்கிருந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புப் புகாரைக் கூறி பெரும் பிரளயத்தை எழுப்பினார்..
இந்த நிலையில், பி அறையை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பி அறையைத் திறப்பதற்கு முன்பு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பிறகுதான் அறையைத்திறக்க வேண்டும். அதேசமயம், இப்போதைக்கு அந்த அறையைத் திறப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களின் மதிப்பைக் கண்டுபிடித்த பின்னர் பி அறையைத் திறப்பது குறித்து யோசிக்கலாம்.
நிபுணர் குழுவின் ஆய்வுச் செலவுக்காக ஆண்டு தோறும் ரூ. 25 லட்சத்தை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும்.
காவல்துறையினர் அளித்துள்ள கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் திருப்தி அடைகிறது. இந்தப் பாதுகாப்பே போதுமானது. காவல்துறையே தொடர்ந்து பாதுகாப்பை அளித்து வரலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications