போதிய பாதுகாப்பு செய்த பின்னரே 'பி' அறையைத் திறக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து பார்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டியினர் கோவிலுக்குள் சென்று ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு நடத்தினர். அப்போது பெருமளவில் வைர, வைடூரிய, தங்க, வெள்ளி நகைக் குவியல் அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
இருப்பினும் முக்கியமான பி அறையை மட்டும் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த அறையைத் திறந்து பார்த்தால், குடும்பமே நாசமாகி விடும் என தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ குடும்பமும் பி அறையைத் திறந்து பார்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் ஏற்கனவே பலமுறை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா அறையைத் திறந்துள்ளதாகவும், அங்கிருந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பரபரப்புப் புகாரைக் கூறி பெரும் பிரளயத்தை எழுப்பினார்..
இந்த நிலையில், பி அறையை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பி அறையைத் திறப்பதற்கு முன்பு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். பிறகுதான் அறையைத்திறக்க வேண்டும். அதேசமயம், இப்போதைக்கு அந்த அறையைத் திறப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கோவிலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களின் மதிப்பைக் கண்டுபிடித்த பின்னர் பி அறையைத் திறப்பது குறித்து யோசிக்கலாம்.
நிபுணர் குழுவின் ஆய்வுச் செலவுக்காக ஆண்டு தோறும் ரூ. 25 லட்சத்தை கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும்.
காவல்துறையினர் அளித்துள்ள கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் திருப்தி அடைகிறது. இந்தப் பாதுகாப்பே போதுமானது. காவல்துறையே தொடர்ந்து பாதுகாப்பை அளித்து வரலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications