விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் உடல்கள் இன்று இரவு திருச்சி வருகை
டெல்லி: நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரி்ன் உடல்கள் இன்று திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
நேபாளத்தில் நடந்த விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்களை திருச்சிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேற்று நேபாளம் சென்றார். அங்கு இந்திய தூதரக அதிகாரிகளைச் ச்ந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மருத்துவமனை சென்று மருத்துவர்களை சந்தித்துப் பேசினார்.
இன்று மாலை 4. 30 மணிக்கு விமானம் மூலம் 8 பேரின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இன்றிரவு 8. 15 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று சிவா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications