வாக்களிக்க 15 கி.மீ. நடக்க வேண்டியிருப்பதால் தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமம்
திருவண்ணாமலை: ஒவ்வொரு தேர்தலின் போதும் 15கி.மீ. நடந்து சென்று வாக்களிக்க வேண்டும் என்பதால் வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைக் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத்தில் ஐவ்வாது மலை பகுதியில் ஆட்டியானூர், எருமையானூர், கீழ்தட்டியாப்பட்டு, பாலவாடி, பாலவாடி போன்ற பல்வேறு மலைக் கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் வசித்த வரும் மக்களுக்கு, முறையான சாலை, குடிநீர் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் உள்ளாட்சி தேர்தலில் சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள கோவிலூர் கிராம வனத்துறை நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இதனால் அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட இடத்தில் வாக்குச் சாவடியை அமைக்க கோரியும் கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க தமிழக தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications