அரசு கேபிள் டிவிக்கு சேலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
சேலம்: அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பு கட்டணம், நிர்ணயிக்கப்பட்டதை விட 30 ரூபாய் கூடுதலாக சேலத்தில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல கேபிள் நெட்வர்க் மூலம் சேனல்கள் ஒளிப்பரப்பி வந்த நிலையி்ல், அரசு கேபிள் டிவி மூலம் 70 ரூபாய்க்கு 90 சேனல்கள் ஒளிப்பரப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கான பணிகள் முடிவடைந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிப்பரப்பு துவங்கியது. முதலில் இலவச சேனல்கள் மட்டுமே ஒளிப்பரப்பப்பட்ட நிலையில் தற்போது கட்டண சேனல்களும் ஒளிப்பரப்பாகி வருகின்றன. ஆனால் சேலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாயை காட்டிலும் 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
100 ரூபாய் கேபிள் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறித்து, அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு கேபிள் மூலம், தனியார் மற்றும் உள்ளூர் சேனல்கள் ஒளிப்பரப்பு செய்வதால் தான் இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications