கரூர் மாவட்டத்தில் 1,945 உள்ளாட்சி பிரநிதிகள் இன்று பதவியேற்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மூலம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் 1,945 பேர் இன்று பதவியேற்க உள்ளனர்.

தமிழகம் முழுக்க கடந்த அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.

அதன்படி கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை உள்ளிட்ட 2 நகராட்சி தலைவர்கள், 72 நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்க உள்ளனர். மேலும், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை உள்ளிட்ட 8 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 115 கவுன்சிலர்கள், 157 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், 1,401 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

உப்பிடமங்கலம், புலியூர், புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, தமிழ்நாடு காகித ஆலை, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், மருதூர், நங்கவரம் ஆகிய 11 டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், 171 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் 16 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்பட 1,945 பேர் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக உள்ளாட்சி அலுவலகங்களில் பிரமாண்ட பந்தல் அமைத்து, நல்ல நேரம் பார்த்து, மேள தாளம் முழுங்க பதவியேற்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+