பிரதமர் பதவிக்கு அத்வானிதான் 'சூப்பர்' பொருத்தம்- ராஜ்நாத் 'ஜிங் சக்'!
டெல்லி: பிரதமர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி தான் மிகப் பொருத்தமானவர் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி நேற்று தனது 84வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது,
பிரமதர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் அத்வானியின் பெயரைப் பார்த்ததும் வருத்தப்பட்டேன். பிரதமர் பதவிக்கு அவர் தான் மிகவும் பொருத்தமானவர். பட்டியலில் அவர் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் அடுத்த தேர்தலில் அத்வானியைத் தான் பிரதமர் நேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றார். அவரது விருப்பத்தை வழிமொழிவது நாடாளுமன்ற குழுவின் பணி என்றார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான ரதயாத்திரையை அத்வானி தனது பிறந்த நாளையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.