சென்னையில் நாளை மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழு கூட்டம் நாளை காலை சென்னையில் நடக்கிறது.
இது குறித்து மதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் சென்னையில் நாளை (10ம் தேதி) காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் காலை 10.00 மணிக்கு அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவது குறித்தும், கூடங்குளம் அணு உலை குறித்தும் பல்வேறு முக்கிய முடிகள் எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications