For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை செல்லூரில் நடந்து போன ரவுடி வெட்டிக் கொலை: கும்பலுக்கு வலைவீச்சு

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் தெருவில் நடந்து சென்ற ரவுடியை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

மதுரை மாவட்டம், செல்லூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். அதே பகுதியில் ரவுடியாக சுற்றித் திரிந்தவர். கடந்த 1999ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் மணிகண்டனுக்கு தொடர்பு உண்டு.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மணிகண்டன் அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
A rowdy named Manikandan was killed by some unknown gang in Madurai at 2.30 am today. Police have filed a case and are investigating about this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X