பிரபல நாளிதழ் நிருபருக்கு அடி உதை: அதிமுக நிர்வாகி அட்டூழியம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரபல நாளிதழ் ஒன்றின் நிருபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பிரபல நாளிதழ் ஒன்றில் முருகாண்டி என்பவர் நிருபராக பணியாற்றி வருகிறார். அவர் குண்டாறு ஆற்றங்கரை விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக ஒரு கட்டுரை எழுதினார். இது குறித்து அதிமுக நிர்வாகி செந்தூரானின் பெயரையும் முருகாண்டி குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செந்தூரான் காரில் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சென்று முருகாண்டியை தேடி உள்ளார். அப்போது முருகாண்டி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி அவர்கள் அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த முருகாண்டி கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் குறித்து கமுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications