பொதுஇடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ள கடாபி மகன் சைப் ஆசை! - முன்னாள் மனைவி

கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம்(39) கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த பெண் நாடியா(29) தான் சைப் அல் இஸ்லாமின் முன்னாள் மனைவி என்று தெரிவித்துள்ளார். மேலும் சைப் பற்றி பல பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாடியா கூறுகையில், "ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இரவுவிடுதி ஒன்றில் கவர்ச்சி நடனம் ஆடும் பணியில் இருந்தேன்.
அப்போதுதான் சைப் அல் இஸ்லாமை முதன்முதலாக சந்தித்தேன். அவரைத் திருமணம் செய்வதற்காக நான் பாரிஸ் சென்று மீண்டும் கன்னித்தன்மை பெறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பிறகு நான் இஸ்லாத்தை தழுவினேன்.
நான் மற்ற பெண்களைப் போன்று கணவன், குடும்பம் என்று வாழ விரும்பினேன். ஆனால் சைப் பல பெண்களுடன் உறவு வைத்து ஜாலியாக வாழவே விரும்பினார். இஸ்லாம் முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் பல பெண்கள், நண்பர்கள் என்று பலர் இருப்பார்கள்.
சைப் போதைப் பொருட்களுக்கு அடிமை. அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டால் சுயகட்டுப்பாட்டை இழந்துவிடுவார். பொது இடம் என்று கூட பார்க்காமல் உறவு வைத்துக் கொள்ள விரும்புபவர். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்பது எனக்கு புரிந்துவிட்டது.
அவர் என்னை ஒரு ஹோட்டலின் ஜன்னல் வழியாக கீழே தள்ளிவிட்டார். 47 நாட்கள் கோமாவில் இருந்தேன். நல்லவேளையாக உயிர் பிழைத்தேன். ஏற்கனவே கடாபி குடும்பப் பெயர் கெட்டுவிட்டதால் நான் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் சைபை கடாபி பாலைவனத்திற்கு அனுப்பிவிட்டார்.
இதையடுத்து நான் லிபியாவில் இருந்து மாஸ்கோவுக்கு திரும்பிவிட்டேன். கடந்த 2008ம் ஆண்டு அவர் என்னை சந்தித்து நாம் மீண்டும் சேர்நது வாழலாம் என்றார். நான் மறுத்துவிட்டேன்," என்றார்.












Click it and Unblock the Notifications