மு.க.அழகிரியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கின் விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு
மதுரை: மதுரை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மு.க.அழகிரியின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி தேர்தல் விதியை மீறியதாகவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தாகவும் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.பி.மோகன் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது மோகன் இறந்துவிட்டார். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மு.க.அழகிரி பணம் பட்டுவாடா செய்தது குறித்து மதுரை மாநகர் சிபிஎம் மாவட்ட செயலாளரும், மதுரை தெற்குத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாதுரையும், பெரியகுளம் தொகுதியின் எம்எல்ஏ லாசரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
அப்போது மு.க.அழகிரி தரப்பில் வழக்கு குறித்த ஆவணங்களை தயார் செய்ய 2 வார கால அவகாசம் கேட்டனர். இதனால் நீதிபதி தனபால் இந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications