செல்லப் பூனைக்கு ரூ.60 கோடி சொத்து எழுதி வைத்த இத்தாலிய மூதாட்டி

Subscribe to Oneindia Tamil

Maria Assunta's cat
ரோம்: இத்தாலியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 60 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது செல்லப் பூனையின் பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா (94). கோடீஸ்வரரின் மனைவி. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் அனாதையாகத் திரிந்த கருப்புப் பூனையை வீட்டுக்கு கொண்டு வந்தார். அந்த பூனையை குழந்தை போல் பாவித்து வளர்த்தார். பூனையும் அவர் மீது பாசமாக இருந்தது.

அந்த பூனைக்கு டொம்மாசோ என்று பெயர் வைத்தார். திடீர் என்று மரியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம், மிலன் ஆகிய நகரங்களில் உள்ள தனது வீடுகள், கலாப்ரியா என்ற இடத்தில் உள்ள நிலங்கள், ரொக்கம், பங்கு பத்திரங்கள் ஆகியவற்றை பூனையின் பெயரில் எழுதி வைத்தார். அந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.60 கோடி ஆகும்.

இத்தனை சொத்துக்களையும் வைத்துக் கொண்டு தனது பூனையை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுமாறு அவர் பல மிருக நல அமைப்புகளை அணுகினார். ஆனால் எந்த அமைப்பும் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அவர் தன்னைக் கவனித்துக் கொள்ள ஸ்டெபானியா என்ற நர்ஸை பணியமர்த்தினார். பூனையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஸ்டெபானியாவுக்கு அளித்தார். இந்நிலையில் மரியா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உயிர் இழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+