மனைவி, மகளைக் கழுத்தை அறுத்துக் கொன்ற தனியார் நிறுவன ஊழியர்
சென்னை: பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்துவிட்டு அவர்களைப் பற்றி குறை கூறி வந்த மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரை அடுத்த முத்து மதினா சாலையைச் சேர்ந்தவர் முத்து மாணிக்கம் (58). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு நாகவள்ளி (55) என்ற மனைவியும், ராஜேஸ்வரி (30) என்ற மகளும் இருந்தனர். ராஜேஸ்வரிக்கு திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த நாகவள்ளியும், ராஜேஸ்வரியும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தகராறு குறித்து 2 பேரும் முத்து மாணிக்கத்திடம் கூறி வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் தவித்த அவர் வெளியூரில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
மனைவி, மகளின் தொல்லை தாங்க முடியாமல் கோவில்களுக்கு சென்றுவிட்டு நேற்று நள்ளிரவு முத்து மாணிக்கம் வீடு திரும்பினார். அப்போது வழக்கம் போல தாயும், மகளும் பக்கத்து வீட்டு தகராறு குறித்து அவரிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கடப்பாரையைக் கொண்டு மனைவி மற்றும் மகளின் தலையில் அடித்தார்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் மயங்கி விழுந்தனர். அப்போது 2 பேரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தார். பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாருக்கும், உறவினருக்கும் போனில் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் முத்து மாணிக்கத்திடம் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications