தனியார் செவிலியர் மாணவர்களுக்கு அரசுப் பணி வழங்க இடைக்காலத் தடை!

Subscribe to Oneindia Tamil

High Court
சென்னை: தனியார் செவிலியர் கல்லூரியில் படித்தோருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு செவிலியர் கல்லூரி மாணவர் ஈஸ்வரமூர்த்தி தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு இத்தடையை பிறப்பித்தார்.

வழக்கு நிலுவையில் இருக்கும் போது அரசாணையை அவசரமாக பிறப்பித்தது ஏன்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+