For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு பணம் வரும் வழி குறித்து விசாரிப்பதாக ப.சிதம்பரம் தகவல்

Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பார்களுக்கு பணம் வரும் வழி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வருபவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை போராட்டக் குழுவினர் மறுத்துள்ளனர். எனினும் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் போராட்டக் குழுவினருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு பணம் வரும் வழி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகின்றது. எங்கள் விசாரணையில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

English summary
Home minister P. Chidambaram has told that the home ministry is investigating about how and from where do the Kudankulam protesters get money. If it finds out something fishy, then strict action will be taken against the protesters, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X