செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டியை தேடிய மக்கள்
செங்கோட்டை: தென்னக ரயில்வே அறிவிப்பைத் தொடர்ந்து செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டியைக் காணாமல் மக்கள் அலைந்து திரிந்தனர்.
செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு காலை 7 மணி, மதியம் 12 மணி, மாலை 4 மணி ஆகிய 3 நேரங்களில் பயணிகள் ரயில் 15 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்திய பின் செங்கோட்டை முதல் விருதுநகர் வரையிலுள்ள பல்லாயிரக்கணக்கான பயணிகள் மதுரை செல்ல இந்த ரயிலையே நம்பியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டத்தால் கூடுதல் ரயில் இயக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும், போராட்டமும் நடத்தினர்.
இதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி தென்னக ரயில்வே சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் பயணிகள் நெருக்கடியைத் தவிர்க்க கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. மதுரையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயில்களிலும் (56731, 56735), செங்கோட்டையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயிலிலும் (56734) கடந்த 8ம் தேதி முதலும், செங்கோட்டையிலிருந்து புறப்படும் பாஞ்சர் ரயில்ளிலும் (56732, 56736), மதுரையிலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயிலிலும் (56733) கடந்த 9ம் தேதி முதலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட ரயில்வேயின் அறிவிப்பை கண்டு பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் தென்னக ரயில்வே அறிவித்தபடி கூடுதல் ரயில் பெட்டியை மட்டும் இணைக்காமல் மறந்து விட்டது. அறிவிப்பு வெளியிட்டு 6 தினங்கள் ஆகியும் இன்று வரை அறிவித்தபடி கூடுதல் பெட்டியை இணைக்க தென்னக ரயில்வே அதிகாரிகள் மறந்துவிட்டனர். பயணிகள் புதிய பெட்டியை தேடி அலைகின்றனர்.
ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் செங்கோட்டை-ஈரோடு புதிய பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்ததை போல் தான் இந்த அறிவிப்பும் என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications