ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை: மும்முரமாக செயல்படுத்த அமெரிக்கா மும்முரம்

Subscribe to Oneindia Tamil

United States
வாசிங்டன்: ஈரான் மீதான பொருளாதாரத் தடை விதிப்பை முழுமையாகச் செயல்படுவத்துவது தொட்ரபாக இந்தியா, பாகிஸ்தான், ரசியா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறியதாவது:

ஈரானின் கச்சா எண்ணெய்யை இந்தியா, பாகிஸ்தான், ரசியா, சீனா ஆகிய நாடுகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

ஈரான் மீதான சர்வதேச பொருளாதாரத் தடையை முழுமையாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தக உறவை மேற்கொண்டுள்ள அனைத்து நாடுகளுடனும் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதை தவிர்க்குமாறு இந்நாடுகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு அமைக்கும் பணியை தொடரப்போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதை கவனத்தில் கொண்டுள்ளோம். இத்திட்டம் சரியானது அல்ல என்பது எங்களது கருத்து. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசுடன் பேசி வருகிறோம்.

இஸ்ரேல் குற்றச்சாட்டு

இந்தியா, ஜார்ஜியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமது நாட்டு தூதர்களை குறிவைத்து ஈரான் ஆதரவு இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

சம்பவ இடங்களில் கிடைக்கக் கூடிய கை ரேகைகள் ஈரானின் ஆதரவை அம்பலப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு உதவுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் விசாரணைக்கு உதவி கோரியுள்ள நாடு எது என்பதை குறிப்பிட விரும்பவில்லை என்றார் அவர்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலக நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரானோ அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குத்தான் பயன்படுத்துவதாக கூறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+