நடராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

தஞ்சை விளாரில் ராமலிங்கம் என்பவரின் 14 ஆயிரம் சதுர அடி நிலத்தை மிரட்டி நடராஜன் அபகரித்ததார் என்பது புகார்.
இப்புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் நடராஜன்.
அரசியல் உள்நோக்கம்
நடராஜனுக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர் மலர்விழி தனது வாதத்தின் போது கூறியதாவது:
பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா ஆஜராகி வருகிறார்.
சசிகலாவுடன் இருந்து அவருக்கு ஆதரவு தந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் நடராஜன் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது என்றார் அவர் .
ஜாமீன் மனுதள்ளுபடி
இந்த வாதத்தை நிராகரித்து நில அபகரிப்புப் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி நடராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடராஜனுடன் குற்றம் சாட்டப்பட்ட சின்னய்யா, குபேந்திரனுக்கும் ஜாமீன் தரப்படவில்லை.
நடராஜன் சகோதரர் சாமிநாதனின் முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் காவலில் வைத்து நடராஜனை விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்..
மலர்விழி யார்?
நடராஜன் வழக்கறிஞராக ஆஜரான மலர்விழி, அதிமுகவில் முன்னாள் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.
தற்போது நடராஜனுக்காக வழக்கில் ஆஜரானதும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications