Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏ.கே.அந்தோணி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள்-ஐபி விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியின் அலுவலக அறையில் ஒட்டுகேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்து குறித்து விசாரணை நடத்த புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தோனியின் அலுவலகத்தில் ஒட்டுகேட்கும் கருவிகள் வைக்கப்பட்டிருந்தது பிப்ரவரி 16-ம் தேதி தெரியவந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வு அமைப்பை பாதுகாப்புத் துறைச் செயலர் சசிகாந்த் ஷர்மா கேட்டுக் கொண்டதாகவும் அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு அமைச்சகத்தில் தொலைபேசி இணைப்புக்கான பணிகளை மேற்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இதேபோன்று ஒட்டுகேட்கும் கருவிகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அப்போது இதுகுறித்து விசாரணை நடத்த நிதி அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் அலுவலகத்திலும் ஒட்டுகேட்கும் கருவிகள் இருந்ததாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+