இடைத்தேர்தல்: எந்த போலீசுக்கும் 30ம் தேதி வரை லீவு கிடையாது: ஏடிஜிபி ஜார்ஜ் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள 230 பூத்களில் 103 பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளது. மேலும் வரும் 30ம் தேதி எந்த போலீசுக்கும் விடுமுறை கிடையாது என்று ஏடிஜிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு 230 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 103 பூத்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு தற்போது 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கரன்கோவிலுக்கு வந்து செல்லும் வெளிமாநில மற்றும் மாவட்ட வாகனங்கள், லாட்ஜிகளுக்கு வந்து செல்லும் நபர்கள் ஆகியவற்றை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களாக தொகுதிக்கு வரும் வாகனங்களை போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் சங்கரன்கோவிலில் 10 சர்வர்லைன் டீம், 10 பறக்கும் படையினர், 10 வீடியோ போலீஸ் படையினர், 5 அதிரடிப் படையினர், மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த 9வது மற்றும் 12வது பட்டாலியனை சேர்ந்த 4 கம்பெனி போலீசார், 3 கலவர தடுப்புப் படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய மாநில உளவுத் துறையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி முதற்கட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 650 வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் ஒரு வாரத்தில் சங்கரன்கோவிலுக்கு வர உள்ளனர். இந்நிலையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட வந்த ஏடிஜிபி ஜார்ஜ் பின்னர் மதுரையில் தென்மண்டல எஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் சங்கரன்கோவில் தேர்தலில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தவும், தென்மாவட்ட எஸ்.பி.க்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் காவல்துறையில் சாதாரண போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை யாருக்கும் 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாநகரத்திலிருந்து முதல்கட்டமாக ஆயுதப்படை போலீசார் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து 300 போலீசார், 100 ஊர்காவல் படையினர், 100 என்சிசி மாணவர்கள் ஆகியோர் சங்கரன்கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+