ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு: கிராமமே மூழ்கி 39 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியான பாதக்ஷான் மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு கிராமமே மூழ்கியதில் அதில் வாழ்ந்த 200 பேரில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடவேற்கு மலைப் பகுதியான பாதக்ஷான் அந்நாட்டிலேயே மிகவும் வருமையான மாகாணம் ஆகும். ஆண்டில் குறைந்தது 6 மாதங்களாவது அங்கு கடும் பனிப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் மாகாணத் தலைநகரான பைசாபாத் அருகே உள்ள சிறிய கிராமமமான ஷெரின் நாசிம் பனியில் மூழ்கியது. இதில் அந்த கிராமத்தில் வாழ்ந்த 200 பேரில் 39 பேர் பலியாகியுள்ளனர், 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமைடந்தவர்கள் தஜிகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. தஜிகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து மற்றும் போர்வைகள் வந்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை.
பாதக்ஷானில் இந்த ஆண்டு மட்டும் பனிப்பொழிவால் 60 பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications